மணிச் செய்திகள் முகப்பு > மணிச் செய்திகள்  
 
 
 
Share
 
1, August 2019
12.00 AN மணிச் செய்திகள்
கர்நாடக அணைகளில் இருந்து பிலிகுண்டுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியாகச் சரிவு...
உடுமலையில் இலவச மடிக் கணினி கேட்டு அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்கள் சாலை மறியல்...
புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடுவணமைச்சர் பொக்கிரியால் ஆலோசனை...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோவிலுக்கு வந்த 4 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தகவல்...
எட்டுவழிச் சாலை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஒன்றாக விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு...
அடுத்த மாதம் 28 ஆம் தேதி ஐநா பொது அவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல்...
கோவை சிறார்கள் முஸ்கின் மற்றும் ரித்திக் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்...
கூடலூர் அருகே பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா சென்ற ஊர்தியின் முகப்பு கண்ணாடியை யானை உடைத்ததால் பரபரப்பு...
குளித்தலையில் ஏரி ஆக்கிரமிப்பை எதிர்த்த இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - ஐந்து பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்...
ஆடிப் பெருக்கு திருவிழாவுக்கு மேட்டூர் அணையிலிருந்து அதிக தண்ணீர் திறக்க காவிரி கரையோர மக்கள் கோரிக்கை...
 
 
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy